இந்தியாவில் பாலியல் ரீதியாக ஆண் பாதிக்கப்பட்டால்...! சட்டம் என்ன சொல்கிறது...? கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,71,503 ஆகப் பதிவாகியுள்ளன. புதுடெல்லி உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. நாளுக்கு நாள் பாலியல் துன்புறுத்தல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த பிரச்சினை ஓய்ந்தாலும், பாலியல் துன்புறுத்தல் மட்டும் ஓயவில்லை. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) பாலியல் குற்றங்களைக் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், இந்தியாவில் கணக்குப்படி ஒரு நாளுக்கு 77 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு மட்டுமே 28,046 சம்பவங்கள் நடந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,71,503 ஆகப் பதிவாகியுள்ளன. முன்னதாக, 2019ம் ஆண்டில், 4,05,326 ஆகவும், 2018ம் ஆண்டில், 3,78,236 ஆக குறைவாக இருந்துள்ளது என ஆய்வில் தெ